Thursday, September 26, 2013

அந்தரங்கத்தை அம்பலப்படுத்தாதீர்... - இது உங்கள் இடம்..!


அந்தரங்கத்தை அம்பலப்படுத்தாதீர்...

சமீபத்தில், என் உறவினரின் திருமணத்தில் கலந்து கொண்டு, இறுதிவரை மணமக்களுடன் இருந்து, அனைத்து வேலைகளையும் செய்து கொடுக்கும் பொறுப்பில் கவனமாய் இருந்தேன். திருமண ஆல்பத்திற்காக போட்டோகிராபர், அடிக்கடி மணமக்களை பலவிதமான போஸ்களை கொடுக்குமாறு கட்டாயப்படுத்தி, பல விதங்களில் போட்டோ எடுத்துக் கொண்டார்.



ஒரு கட்டத்தில், மணமக்கள் இருவரும் முத்தமிட்டுக்கொள்ளுமாறு வற்புறுத்தினார். அதற்கு மணமக்கள் இருவரும் தயங்கினர். இருந்தாலும், "இதெல்லாம் சகஜம். இப்போதெல்லாம் ஆல்பத்தில் முத்தக்காட்சிகள் இடம் பெறுவது பேஷனாகி விட்டது...' என்று, போட்டோகிராபர் கட்டாயப்படுத்தவே, மணமக்களும் இசைந்தனர். இதைக் கண்ட எனக்கும், அங்கிருந்தவர்களுக்கும் அதிர்ச்சி.



என்னதான் நாகரிகம் என்றாலும், தாம்பத்யத்தின் அடிப்படை உணர்வான முத்தத்தை, பலர் முன்னிலையில் பரிமாறிக் கொள்வதும், அதை புகைப்படமாக எடுத்து, பதிவு செய்வதும், கலாசாரத்தை மீறிய செயல் அல்லவா? பின், யாராவது ஆல்பத்தை பார்க்க நேரிட்டால், மணமக்களை தவறாகவோ, உணர்ச்சிமயமாகவோ பார்க்க கூடும் அல்லவா? போட்டோகிராபர், வீடியோகிராபர் இப்படி போஸ் கொடுக்க வற்புறுத்தினாலும், நாம் மரபை மீறக்கூடாது.



அந்தரங்கம் புனிதமானது என்பதை, மணமக்கள் புரிந்து கொள்வது அவசியம்.

— ஆர்.மதன், மதுரை.

No comments:

Post a Comment